Saturday, 23 November 2013

மாமியார் குறுக்கீடு பிடிக்காததால் தனிகுடித்தனம் போகிறார் ஐஸ்!

 மாமியார் ஜெயா பச்சனின் குறுக்கீடு அதிகரித்துள்ளதால் தனிக் குடித்தனம் செல்ல முடிவு செய்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய். அபிஷேக் பச்சனை மணந்தபிறகு அவருடன் மும்பையில் உள்ள மாமியார் வீட்டிலேயே வசித்து வருகிறார் ஐஸ்வர்யாராய். இந்நிலையில் ஐஸ்வர்யாவின் ஒவ்வொரு விஷயத்திலும் மாமியார் ஜெயா பச்சன் தலையிடுவதாக கூறப்படுகிறது. மாமானார் அமிதாப்பச்சன் தன் வேலை உண்டு, பேத்தி உண்டு என்று மவுனமாக இருப்பதால் அவர் மீது ஐஸ்வர்யாவுக்கு வருத்தம் எதுவும் இல்லையாம். சமீபத்தில்...

குளிர்காலத்துல இந்த உணவுகளை மறக்காதீங்க...

நவம்பர் மாதம் வந்தாலே, சரியான குளிர்ச்சி இருக்கும். அந்த நேரம் ஸ்வெட்டர், ஸ்கார்ப், கால்களுக்கு சாக்ஸ் மற்றும் கைகளுக்கு க்ளொஸ் போன்றவற்றை அணிந்து கொண்டிருக்கும் நிலையில் இருப்போம். ஏனெனில் அந்த அளவில் குளிர்ச்சியானது இருக்கும். சொல்லப்போனால் வெளியே செல்லக்கூட பயந்து, சிலர் பிடித்த உணவைக் கூட சரியாக சாப்பிடமாட்டோம். அதிலும் சிலர் பழங்கள் சாப்பிட்டால், சளி, ஜலதோஷம் போன்றவை பிடிக்கும் என்று அவற்றை சாப்பிடுவதையே நிறுத்திவிடுவர்.இவ்வாறெல்லாம் சரியாக...

குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....!

குளிர்காலம் என்றாலே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது இருக்கிறது. அந்த நடவடிக்கைகளை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சட்டென்று வந்து ஒட்டிக்கொண்டு விடுகின்றன. பொதுவாக, கோடைகாலத்தில் குளிர்பானங்களுக்கு எல்லோருமே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். காரணம், அப்போது வெயில் காரணமாக உடலில் அதிக அளவில் வியர்வை வெளியாகும், சக்தி இழப்பு உடனே ஏற்படும். இதுதவிர, "அல்கலைன் சிட்ரைட்" என்ற அமிலமும் அதிக அளவில் வெளியாகிறது.புளிப்பு...

பேஸ்புக்கிலுள்ள புகைப்படங்களை உருப்பெருக்கம் (Zoom) செய்ய உதவும் நீட்சி!

 சமூக வலைத்தளங்களின் வரிசையில் முன்னணியில் திகழும் பேஸ்புக்கினை அடிப்படையாகக் கொண்டு ஏற்கனவே பல நீட்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.இதன் தொடர்சியாக இப்பொழுது Facebook Photo Zoom எனும் நீட்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,இந்த நீட்சியின் உதவியுடன் பேஸ்புக் தளத்தில் பகிரப்படும் புகைப்படங்களை நேரடியாகவே உருப்பெருக்கம் செய்ய முடியும்.கூகுள் குரோம் மற்றும் பையர்பொக்ஸ் உலாவிகளுக்காக இந்த நீட்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.தரவிறக்கச்...

பால்கி டைரக்ஷனில் அக்ஷரா நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது -கமல்ஹாசன்!

 பால்கி டைரக்ஷனில் அக்ஷரா நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.பேட்டிகோவாவில் நடந்த சர்வதேச படவிழாவுக்கு வந்த நடிகர் கமல்ஹாசன், அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:திரையுலகில் என் மூத்த மகள் சுருதிஹாசன் அந்தஸ்து எப்படி அமையும்? என்று நான் கவலைப்பட்ட காலம் முடிந்து விட்டது. இனி, அவரைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. தென்னிந்திய திரையுலகிலும், இந்தி பட உலகிலும் சுருதி பல்வேறு டைரக்டர்களிடம்...

குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள்!

1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, “உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே'' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும்போது, “அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்’' என்று சொல்ல நேரிடலாம்.3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது...

இத சொன்னா என்னைய கேனையன்னு சொல்றனுங்க..

1.சினிமாக் கூத்தாடிகளை கடவுளெனக் கொண்டாடும் தமிழன் இருக்கும்வரை ஒருகோடி ஆண்டுகளானாலும் இச்சமூகம் உருப்படப்போவதில்லை.2.உங்களுக்குப் பிடிக்காத வரன் வருதா? கம்னு, வாக்காளர் அட்டையிலிருக்கிற படத்தைக் குடுத்தனுப்பிச்சிருங்க. கண்டிப்பா ரிஜக்ட் ஆகிடும்..3.ஓட்ஸ் சாப்பிட்டா உடம்பு குறையுதாம், எனக்கென்னமோ ஓட்ஸ் தான் குறையர மாதிரி இருக்கு4.மனைவி எவ்வளவுதான் திட்டி கழுவி கழுவி ஊத்துனாலும், அசையாம கல்லு மாதிரி கணவன் இருப்பதால்தான், "கல்லானாலும் கணவன்"னு சொல்றாங்க5.டாஸ்மாக்கை நடத்தும் அரசு விவசாயத்தையும் ஏற்று நடத்தலாம்..6.ரெண்டு வீலுக்கும் MRF டயர் போட்டாலும்......

16 செல்வங்களும் அவைகளைப் பெரும் வழிகளும்!

 குறிப்பு: இவற்றில் உங்களிடம் எத்தனை செல்வங்கள் இருக்கின்றது என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்.இதோ 16 வகையான செல்வங்கள் 1. புகழ் 2. வெற்றி 3. பணம் (பொன்), 4. இரக்கம் 5. அறிவு 6. அழகு 7. கல்வி 8. நோயின்மை 9. வலிமை 10. நல்விதி 11. உணவு 12. நன் மக்கள் 13. பெருமை 14. இனிமை 15. துணிவு 16. நீண்ட ஆயுள் 16 செல்வங்களைப் பெரும் வழிகள் 1. புகழ் :யாரும் புகழோடு தோன்றுவதில்லை. செய்யும் செயலிலும், நடக்கும் விதங்களிலும், நன்னடத்தை மற்றும் உதவி மனப்பான்மையான...

உலகில் விளையாடப்படும் சில விசித்திரமான விளையாட்டுக்கள்!!!

உலகில் எத்தனையோ விளையாட்டுக்கள் உள்ளன. அனைத்து விளையாட்டுக்களுமே ஒரே மாதிரியானதாக இருக்காது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதே சமயம் உலகில் சில விசித்திரமான விளையாட்டுக்களும் உள்ளன. அத்தகைய விளையாட்டுக்களை அனைவரும் விளையாட முடியாது. துணிச்சல் உள்ளவர்கள் தான் விசித்திரமான விளையாட்டுக்களை விளையாட முடியும்.அப்படி துணிச்சல் இருப்பவர்கள் தான் சாதனைப் படைக்க வேண்டுமென்று பல்வேறு முயற்சிகளை எடுப்பார்கள். சிலருக்கு துணிச்சல் இருந்தும் என்ன செய்வதென்று குழப்பத்தில் இருப்பார்கள். மேலும் சிலர் தம்மிடம் இருக்கும் துணிச்சலால், விசித்திரமான பல விஷயங்களில்...

இந்திய வாகனப் பதிவு எண்ணிற்கான குறியீடுக !

இந்தியாவிலிருக்கும் மாநிலங்களிலும், மத்திய அரசின் ஆட்சிக்குட்பட்ட ஆட்சிப் பகுதிகளிலும் உள்ள போக்குவரத்து வாகனங்களுக்கு வழங்கப்படும் பதிவு எண்களில் அந்தந்த மாநிலம் அல்லது ஆட்சிப்பகுதிக்கான குறியீடு இரண்டு ஆங்கில எழுத்துக்களாக முதலில் இடம் பெறுகிறது. இங்கு ஒவ்வொரு மாநிலம் / ஆட்சிப்பகுதிக்கான குறியீடு தரப்பட்டுள்ளன.■அருணாசலப் பிரதேசம் - AR■அஸ்ஸாம் - AS■ஆந்திரப் பிரதேசம் - AP■பீகார் - BR■கோவா - GA■குஜராத் - GJ■ஹரியானா - HR■இமாசலப் பிரதேசம் - HP■கர்நாடகம் - KA■கேரளம் - KL■மத்தியப் பிரதேசம் - MP■மகாராஷ்டிரம் - MH■மணிப்பூர் - MN■மேகாலயா - ML■மிசோரம் -...

முழங்கால் கருப்பை நீக்க சில சூப்பர் டிப்ஸ்...

 உடலை எவ்வளவு தான் அழகாக வைத்திருந்தாலும், அவற்றின் அழகை முழங்கால் மற்றும் முழங்கை கெடுத்துவிடுகின்றன. ஏனெனில் மற்ற பகுதியை விட இந்த பகுதியானது கருப்பாக காணப்படும். மேலும் உடல் அழகாக காணப்பட வேண்டும் என்பதற்காக எத்தனை பராமரிப்புகளை மேற்கொண்டாலும், அதிலும் கால்களை கவனமாக பராமரித்தாலும் மென்மையாக, முடி இல்லாமல் அழகாக இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் முழங்கால் மட்டும் கருப்பாக இருந்தால், நாம் செய்யும் அனைத்தும் வீணாகிவிட்டது போல் இருக்கும். ஆகவே...

சர்வதேச ஓபன் சதுரங்கம்: தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்!

 தமிழக அரசின் ஆதரவுடன் சென்னை கிராண்ட்மாஸ்டர் சர்வதேச ஓபன் சதுரங்க (செஸ்) போட்டித் தொடர் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. 26 கிராண்ட்மாஸ்டர்கள், 33 சர்வதேச மாஸ்டர்கள் உள்பட 118 வீரர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் நேற்று கடைசி சுற்றான 11-வது சுற்று நடந்தது. இதன் முடிவில் இந்திய வீரர் வி.ஆர். அரவிந்த் சிதம்பரம் 9 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். கடைசி சுற்றில் சக நாட்டவர் விஷ்ணு பிரசன்னாவுடன் டிரா செய்த 14 வயதான அரவிந்த்...

பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது முக்கியமாக செய்யக் கூடாதவை சில……

பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது முக்கியமாக செய்யக் கூடாதவை சில……* மிகவும் உயர்ந்ததும், சிரமத்தைக் கொடுக்கக் கூடியதுமானதும், மேடு பள்ளங்களுள்ளதும், கடினமாக உள்ளதுமான இடங்களிலும் இருக்கைகளிலும் உட்காரக் கூடாது. * மலம், சிறுநீர் உந்துதல்களை அடக்கக் கூடாது. கடுமையான அல்லது தனக்கு உகந்ததல்லாத உடற்பயிற்சி செய்யக் கூடாது. * மல்லாந்து படுத்துக் கொள்ளக் கூடாது. அதனால் தொப்புள் கொடி குழந்தையின் கழுத்தில் சுற்றிக் கொள்ளும். * அதிக காரம், சூடான...

சீன பொம்மைகள், தயாராவதோ இந்தியாவில்…

 விலை குறைந்த பொம்மைகள் என்றாலே அது சீன தயாரிப்புகள் என்பதில் நமக்கு எந்தவித சந்தேகமும் கிடையாது. ஆனால் அடுத்த முறை நீங்கள் சீன தயாரிப்பில் உருவான பொம்மையை வாங்கினாலும் அது நிச்சயம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருக்கும் என்பதை நம்புங்கள். சந்தையில் விற்பனையாகும் பெரும்பாலான பொம்மைகள் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சிட்டியில் தயாரானவை என்றால் நம்புவது சிரமம்தான். ஆனால் அதுதான் உண்மை. பால்ஸ் பிளஷ் இந்தியா எனும் பொம்மை தயாரிப்பு நிறுவனம்...

இன்னும் எளிதாகுமா பத்திரப் பதிவு?

 முத்திரைத் தீர்வை விற்பனையில் ஆந்திரா முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளது. ஆந்திராவில் வில்லங்கச் சான்றிதழ்கள் வழங்கும் முறையை 1980 ஆம் ஆண்டு முதல் கம்ப்யூட்டர் மயமாக்கிவிட்டார்கள். அத்துடன் 1983ஆம் ஆண்டில் பதிவுத்துறை கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டுச் சொத்து தொடர்பான எல்லா விவரங்களும் கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டுவிட்டது. அதைப் போலவே பொதுவான பவர் ஆஃ அட்டர்னி நிலைமையைத் தெரிந்துகொள்ளவும் பதிவுத்துறை இணையதளம் உதவுகிறது. இப்படிப் பல வசதிகள்...

பெரிய திரையில் மா.பா.கா. ஆனந்த்!

 சின்னத்திரையில் இருந்து பல திறமைசாலிகள் பெரியத்திரைக்கு அறிமுகமாகிக் கொண்டுதான் இருக்கின்றனர்.சந்தானம், சிவகார்த்திகேயனை தொடர்ந்து இப்போது மேலும் ஒருவர் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்திருக்கிறார். அவர்தான் மா.பா.கா ஆனந்த். இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.இந்நிலையில் வானவராயன் வல்லவராயன் படத்தின் மூலம் மா.பா.கா ஆனந்த் பெரிய திரைக்கு அறிமுகமாகிறார்....

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை...

 தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்திகிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது பரோட்டாகடை .,அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடுவிருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .பரோட்டாவின் கதை என்ன தெரியுமா ?பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும்....

தலைவலி அடிக்கடி வருதா?

  அனைவரும் இன்றைய நாள் நன்றாக இருக்க வேண்டும், எந்த ஒரு டென்சனும் வந்துவிடக் கூடாது என்று அன்றைய தினத்தை ஆரம்பிப்பார்கள். ஆனால் அதை தலைவலி வந்து கெடுத்துவிடும். இந்த தலைவலி வேறு எந்த ஒரு காரணத்தினாலும் ஏற்படுவதில்லை. நாம் செய்யும் செயல்களால் தான் அந்த தலைவலியானது வருகிறது. இதற்காக நாம் நிறைய மாத்திரைகள், வீட்டு மருந்துகள் என்று பல வலிநிவாரணிகளை எடுத்துக் கொண்டாலும், அவை மீண்டும் மீண்டும் வந்து கொண்டு தான் இருக்கின்றன.அதிலும் அவ்வாறு...

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும். .

*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி*நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது*கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.*வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது*அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.*சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.*நவால் பவுடர் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு...

சுகப்பிரசவம் நடக்க சில வழிமுறைகள்!

 கர்ப்பிணிகள் வீட்டு வேலைகளை செய்து வந்தாலே எளிதாக அவர்களுக்கு சுகப்பிரசவம் ஆகும். கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்தில் மல்லாந்து படுப்பதோ, மல்லாந்தபடி படுத்திருந்து அப்படியே எழுவதோ மிகவும் தவறு. முதல் 3 மாதங்களுக்கு ஒருக்களித்து படுத்தபடி இருப்பதுதான், கருவின் வளர்ச்சிக்கு உதவும். அதேபோன்று, ஒருக்களித்த படியே கையை ஊன்றித்தான் எழுந்திருக்க வேண்டும்.ஒருக்களித்தபடி படுக்கும் போது வயிறு தளர்வான நிலையில் இருக்கும். ஆனால் மல்லாந்து படுத்தால் வயிறு இழுத்த...

அஜித்தின் 'வீரம்' எக்ஸ்க்ளூசிவ் !

 வருகிற பொங்கலுக்கு அஜித்தின் 'வீரம்'  ரசிகர்களுக்குப் பெரிய பொங்கல் விருந்து. வீரத்தின் எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள் உங்களுக்காக: *அஜித் முதன் முதலாக நடிக்கும் பக்கா வில்லேஜ் சப்ஜெக்ட் . வில்லேஜ் கதையில் அவ்வளவு பொருத்தமாக அஜித் பின்னி எடுத்திருக்கிறார். *எம்.ஜி.ஆரின் 'எங்க வீட்டு பிள்ளை' மாதிரியும், ரஜினியின் 'முரட்டுக்காளை' மாதிரியும் சென்டிமென்ட் ப்ளஸ் ஆக்ஷன் படம்.*படத்தில் அஜித்தின் கேரக்டர் பெயர் வினாயகம்.அஜித்தின் தம்பிகளாக மைனா விதார்த்,...

ஹனிமூன் (தேன்நிலவு ) என்று பெயர் வரக் காரணம் தெரியுமா ?

 திருமணமான ஜோடிகளுக்கு மிகப்பெரும் இன்ப நிகழ்வாக அமைவது ஹனிமூன் என்கிற தேன்நிலவு தான். தம்பதிகள் உல்லாசமாக சில மாதங்களை கழிப்பதே ஹனிமூன். ஆரம்ப காலங்களில் ஹனிமூன் கிடையாது. ஹனிமன்த் தான் இருந்துள்ளது. அதுதான் பின்னாளில் ஹனிமூனாக மாறியதாக கூறுகின்றனர். டியூட்டன் என்ற இன மக்கள் திருமணமான தம்பதிகளுக்கு தேனை முப்பது நாட்கள் கொடுப்பார்களாம். இதைத்தான் ஹனிமன்த் என்று கூறியுள்ளனர்.எகிப்து, பாரசீகம், சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளில் தேனுக்கும்,...

ஆண்டின் 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசய கோயில்!

  கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் நகரம் 'ஏழைகளின் ஊட்டி' என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. இந்த நகரத்தில் அமைந்திருக்கும் ஹாசனாம்பா கோயிலின் காரணமாகவே இந்நகரத்துக்கு ஹாசன் என்று பெயர் வந்தது. இக்கோயில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்காக திறந்துவிடப்படுகிறது.  அக்டோபர் 25-ஆம் தேதியிலிருந்து, 4-ஆம் தேதி வரை பக்தர்கள் ஹாசனாம்பா அம்மனை தரிசனம் செய்யலாம். எனினும் கோயில் 24-ஆம் தேதியே திறக்கப்பட்டாலும் 24...

மூன்று விஷயங்கள்.....

மூன்று விஷயங்கள்.....1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை......நேரம் இறப்பு வாடிக்கையளர்கள்2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளை விரோதியாக்கும்.......நகை மனைவிசொத்து3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது.....புத்தி கல்வி நற்பண்புகள்4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்......உண்மை கடமை இறப்பு5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை....வில்லிலிருந்து அம்பு வாயிலிருந்து சொல் உடலிலிருந்து உயிர்6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்.......தாய் தந்தை இளமை7.மூன்று...

கர்ப்பிணிகளுக்கு நல்ல தூக்கம் வர வழிகள்!

கர்ப்பமாக இருக்கும் போது தூங்குவது என்பது மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கும்.  வயிறானது பெரியதாக மாறும் போது, எந்த பக்கமும் திரும்பி தூங்க முடியாது. மேலும் தூங்குவதற்கு வசதியே இருக்காது. அதுமட்டுமல்லாமல் வேறு சில காரணங்களாலும் தூங்குவதில் அவஸ்தை ஏற்படுகிறது. அதில் அடிக்கடி சிறுநீர் வருவது, மனநிலை மாற்றம், பகல் நேரத்தில் குட்டித் தூக்கம் போடுவது, தசைப்பிடிப்புகள் போன்றவையும் ஒருவித காரணங்களாகும். ஆனால் கர்ப்பிணிகளுக்கும் போதிய அளவில் தூக்கம் இருந்தால் தான் வயிற்றில் வளரும் குழந்தைக்கும், தாய்க்கும் நல்லது. கர்ப்பமாக இருக்கும் போது எவ்வளவு முயற்சி...

தீபங்களால் தரையில் ஏற்படும் எண்ணெய் கறையை அகற்ற சில டிப்ஸ்...

 தீபங்களில் உள்ள எண்ணெய் தரையில் சிந்தாமல் இருக்குமா என்ன? கண்டிப்பாக சிந்தும் வாய்ப்புகள் அதிகம். நாம் எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் சரி எண்ணெய் சிந்துவதற்கான வாய்ப்புகள் அதிகமே. தீபங்கள் எரிய எரிய எண்ணெய் மெதுவாக தரையில் படரும். இதுவே தரையில் கறையை ஏற்படுத்திவிடும். ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த கறையை நீக்க பல வழிகள் உள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த கறையை நீக்க பயன்படுத்தப்படும் பொருட்களில் அமிலங்கள் கலக்கப்பட்டுள்ளது. அவைகளை பயன்படுத்தி கரைகளை சுலபமாக நீக்கினாலும் கூட, அது தரையை பாழாக்கி விடுமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தும்.ஆகவே பாதுகாப்பான...

பொது அறிவு - தெரிந்துக் கொள்ளுங்கள்!

1. தேசியகீதம் முதன் முதலில் ஜப்பானில்தான் தோன்றியது.2. ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் ஏறத்தாழ 450 அடி நீளமுள்ள வலையைப் பின்னுகிறது.3. பிரான்ஸ் நாட்டில் ஏப்ரல் முதல் தேதியை மீன்கள் தினமாகக் கொண்டாடுகிறார்கள்.4. முதலையின் ஆயுள் 60 ஆண்டுகள். அதன் முதுகில் இருக்கும் பெரிய புடைப்புகளைக் கொண்டு அதன் வயதைக் கணிக்கிறார்கள்.5. புல் வகையில் மிக உயரமாக வளரக்கூடியது மூங்கில். 36 மீட்டர் உயரம் வரை இது வளரும். ஒரு நாளைக்கு அரை மீட்டர் அளவு வளரும்.6. மண்புழுவிற்கு கண்ணும் காதும் கிடையாது. ஆனால், ஒளியையும் அதிர்வையும் உணரக் கூடிய ஆற்றல் உண்டு.7. "வீனஸ் கிர்டில்'...

சுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு:

சுருக்கமாக: அகிம்சை முறையில் போராடி கொண்டு இருந்த காந்தியிடம் சந்திரபோஸ் சொன்னார்.அகிம்சை முறையில் போராடினால் பல ஆண்டுகளாக இந்த போராட்டம் இழுத்து கொண்டே போகும்.கோடிகணக்கான இந்தியர்களை வெறும் இருபதாயிரம் வெள்ளையனைக் கொண்ட ராணுவம் அடிமை படுத்தி வைத்து இருக்கிறாது.ஏன் அந்த ராணுவத்தை அடித்து விரட்ட கூடாது. அவர்களை நான் ஆயுத ரீதியாக எதிர்கொள்ள திட்ட மிட்டு இருக்கிறேன். உங்களின் கருத்து என்ன என்று...

டீசல் காரில் அதிக மைலேஜ் பெறுவதற்கான சில வழிமுறைகள்!

அட வேற ஏதாவது நினைத்துக் கொள்ளாதீர்கள். உச்சம் என்று குறிப்பிட்டுள்ளது மைலேஜைதான். பெட்ரோல் விலை விரட்டி அடித்து அரட்டி வரும் வேளையில் டீசல் கார்கள்தான் சிறந்த தீர்வாக இருக்கின்றன. அதிக மைலேஜ்தான் இதற்கு முக்கிய காரணம். குறைவான சப்தம், நவீன தொழில்நுட்பம் கொண்டதாக டீசல் எஞ்சின்கள் மேம்பட்டிருக்கின்றன.இருந்தாலும், பெட்ரோல் கார் போன்று டீசல் கார்கள் உடனடி பிக்கப் கொடுப்பதில்லை. பெட்ரோல் காரை போன்று ஓட்டினால் நிச்சயம் அது மைலேஜில் அதிக பாதிப்பு ஏற்படுத்தும். எனவே, டீசல் கார் ஓட்டும்போது டிரைவிங் பழக்கத்தை சிறிதளவு மாற்றிக் கொண்டால் சிறப்பான மைலேஜ்...

கர்ப்பிணிகளின் சோர்வை போக்கும் உணவுகள்!

 கருவுற்றிருக்கும் காலத்தில், ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டியது மிக முக்கியமான ஒன்று. ஏனெனில் தாயின் உணவைப் பொறுத்தே குழந்தையின் ஆரோக்கியம் உள்ளது. இந்த ஒன்பது மாத காலமும் ஒரு தாய் தன் குழந்தையை கருவில் சுமப்பது என்பது எளிதான காரியம் அல்ல. ஒவ்வொரு பெண்ணும் தான் கருவுற்றிக்கும் காலத்தை பெரிதும் விரும்புவார்கள். குழந்தையின் ஒவ்வொரு அசைவுகளும், தாய்க்கு மிகுந்த இன்பத்தை அளிக்கும். ஆனால் கர்ப்ப காலத்தில் அதிக சோர்வு இருக்கும். அதிலும்...

நெஞ்சைத் தொட்ட குட்டிக்கதை..

ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார்..ஒருநாள் 'ஆபீஸ்' போய் வேலை செய்து பார்..சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்..அவள் ஒருநாள் பொறுமை இழந்து,ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க..காலைல குளிப்பாட்டி சாப்பிட வச்சு,வீட்டுப் பாடங்கள் சொல்லிக்கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க..அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன்..என எதிர் சவால்விட்டாள்..கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்..அவன் வீட்டில் இருக்க..இவள்...

திருமண பழமொழிகள்!

   திருமணம் செய்வதற்கு முன் இரண்டு கண்களையும் திறந்து வைத்துக்கொள்; திருமணம் ஆனபின் ஒன்றை மூடிக்கொள்.- அமெரிக்காமணவாழ்க்கை என்பது இரும்புக் கோட்டை மாதிரி. வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்ல விரும்புகிறார்கள்; உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்ல விரும்புகிறார்கள். - அரேபியா மனைவி - வீட்டின் ஆபரணம் - இந்தியா கெட்டிக்காரப் பெண் - தான் காதலிப்பவனை விட்டு விட்டுத் தன்னை காதலிப்பவனைத்தான் மணப்பாள்.- செக்கோஸ்லோவேகியா திருமணம் செய்து...

எகிறும் சைபர் கிரைம்!- இணையதள பாதுகாப்பு கருத்தரங்கங்கில் பகீர்!

 “ஒவ்வொரு நிமிடத்திலும் கம்ப்யூட்டர்களை தாக்கக் கூடிய 45 வைரஸ் இணையதளங்களும், பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 200 புதிய இணைய தளங்களும் உருவாக்கப்படுகிறது.அதேபோன்று ஒரு நிமிடத்திலும் தனிப்பட்டவர்களின் 180 பாஸ்«வர்டுகள் திருடப்படுகிறது. இதன் மூலம் 200 மில்லியன் டாலர் திருடப்படுகிறது. தற்போது பார்த்தால் இந்த நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 50 சதவீதம் இணைய தள குற்றங்கள் அதிகரித்துள்ளது.”என்று இணையதள பாதுகாப்பு...

கால்சியம் குறைபாடு இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிடுங்க!

 மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளில் மாற்றங்கள் தொடர்ச்சியாக இருக்கும். எலும்புகளுக்கான அடிக்கட்டமைப்பை புரதங்கள் வலுவாக்குகின்றன. கால்சியம், பாஸ்பேட் போன்ற மினரல்கள் எலும்புகளுக்கு இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது. இந்த இயக்கம் உடலில் தொடர்ந்து இருப்பதால் உணவில் அதிக கால்சியம் தேவைப்படுகிறது. மேலும் தசை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு அதி அத்தியாவசியமான கால்சியம் சத்து குறைந்தால் அது பலவிதமான வலிகளுக்குக் காரணமாகலாம்....